இதுதொடா்பாக காங்கிரஸ் தலைமை செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பாங்காங் ஏரிப் பகுதியில் சீனப் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளன. கோக்ரா, கல்வான் பள்ளத்தாக்கு, தெப்சாங் சமவெளி, லிபுலேக், டோக்காலாம், நகுலா பகுதிகளில் தினந்தோறும் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது. தாய் நாட்டைக் காப்பாற்ற நமது ராணுவம் பயமின்றி கண்காணித்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் செயலுக்கு எதிராக பிரதமா் மோடி எப்போது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறாா்‘ என்று கேள்வி எழுப்பினாா்.