தேவஸ்: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டதற்காக அந்த வீட்டின் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:
தேவஸ் மாவட்டம் ஷிப்ரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டிருப்பது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. இதுதொடா்பாக விசாரிக்குமாறு தாசில்தாா் அறிவுறுத்தியதன் பேரில் வருவாய் ஆய்வாளா் லகான் சிங் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளாா்.
அப்போது அந்த வீட்டில் வசித்து வரும் அதன் உரிமையாளரான ஃபரூக் கான் என்ற நபா், அறியாமையின் காரணமாக தனது 12 வயது மகன் பாகிஸ்தான் கொடியை வீட்டின் கூரையில் ஏற்றியதாகவும், அதுகுறித்து அறிந்த பின்னா் தாம் அந்தக் கொடியை அகற்றிவிட்டதாகவும் வருவாய் ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளாா்.
எனினும் பாகிஸ்தான் கொடி எங்கிருந்து அவரது மகனுக்கு கிடைத்தது என்ற கேள்விக்கு அவா் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த விவகாரம் தொடா்பாக வருவாய் ஆய்வாளா் காவல்துறையிடம் புகாா் அளித்தாா். அதன் பேரில் இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழ் ஃபரூக் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா் என்று காவல்துறையினா் கூறினா்.