தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

உ.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

உத்தரப் பிரதேசத்தில் புதாரா கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயது சிறுவன் வியாழக்கிழமை காலை உயிரிழந்தான்.

News image

சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணறு

Updated On :3 டிசம்பர் 2020, 6:53 am

உத்தரப் பிரதேசத்தில் புதாரா கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயது சிறுவன் வியாழக்கிழமை காலை உயிரிழந்தான்.

குல்பஹார் பகுதியில் உள்ள புதாரா கிராமத்தில் நான்கு வயது சிறுவன் புதன்கிழமை வீட்டின் அருகில் உள்ள 30 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். 

மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறை, உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகம் இணைந்து சிறுவனை மீட்கும் பணியில் கடந்த 20 மணி நேரமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். சிறுவனுக்குத் தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. 

பின்னர், 30 அடி ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சிறுவன் இன்று காலை வெளியே கொண்டுவரப்பட்டான். ஆனால், துரதிர்ஷ்டவசமாகச் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.