எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாக சனிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Pakistani Rangers open fire on forward posts, villages in J&K's Kathua district
Pakistani Rangers open fire on forward posts, villages in J&K's Kathua district

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாக சனிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹிரானகர் துறையின் பன்சார் பார்டர் புறக்காவல் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். 

எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தொடர்ந்து அதிகாலை 3.30 வரை தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இந்தியத் தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

குர்னம் மற்றும் கரோல் கிருஷ்ணா எல்லை புறக்காவல் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் சில நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com