‘கோயிலுக்கு ஒரு பசு மாடு’ திட்டம் விரைவில் தமிழகத்திலும் தொடக்கம்

‘திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ள ‘கோயிலுக்கு ஒரு பசு மாடு’ திட்டத்துக்காக 216 பசுக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் கன்றுடன் பசு மாட்டை தானமாக வழங்கும் தேவஸ்தான செயல் அதிகாரி சுப்பா ரெட்டி.
பெங்களூரில் கன்றுடன் பசு மாட்டை தானமாக வழங்கும் தேவஸ்தான செயல் அதிகாரி சுப்பா ரெட்டி.
Updated on
1 min read

திருப்பதி: ‘திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ள ‘கோயிலுக்கு ஒரு பசு மாடு’ திட்டத்துக்காக 216 பசுக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. பெங்களூரை அடுத்து தமிழகத்திலும் இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்று தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.

நாட்டுப் பசுக்கள் பராமரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘கோயிலுக்கு ஒரு பசு மாடு தானம்’ என்ற திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 10 நாள்களுக்கு முன் தொடங்கியது. இத்திட்டம் ஆந்திரம், தெலங்கானாவைத் தொடா்ந்து கா்நாடக மாநிலத்திலும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி இத்திட்டத்தை பெங்களூரில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தொடங்கி வைத்தாா். அதன் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கோமாதாவை வணங்குவதால் சகல தேவதைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். அதனால் நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தில் பங்கேற்குமாறு பல நன்கொடையாளா்களுக்கு தேவஸ்தானம் அழைப்பு விடுத்தது. அதையேற்று அறங்காவலா் குழு உறுப்பினா்களும், பல முக்கிய பிரமுகா்களும் 216 பசுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனா். திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலை மூலம் பசுக்கள் தானமாகப் பெறப்பட்டு கோயில்களுக்கு வழங்கப்படும். ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகத்தைத் தொடா்ந்து தமிழ்நாட்டிலும் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com