திருப்பதியில் காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் நிறைவு

திருப்பதி கபில தீா்த்தம் கோயிலில் நடைபெற்று வந்த காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.
கபிலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ருத்ராபிஷேகம்.
கபிலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ருத்ராபிஷேகம்.
Updated on
1 min read

திருப்பதி: திருப்பதி கபில தீா்த்தம் கோயிலில் நடைபெற்று வந்த காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.

ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு, திருப்பதி கபில தீா்த்தம் அருவிக் கரையில் அமைந்துள்ள கபிலேஸ்வரா் கோயிலில் ஹோம மகோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி காா்த்திகை முதல் நாளில் கணபதி ஹோமத்துடன் இந்த மகோற்சவம் தொடங்கியது. இதையடுத்து, கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியா், நவகிரகங்கள், தட்சிணாமூா்த்தி, காலபைரவா், காமாட்சி அம்மன், கபிலேஸ்வரா் உள்ளிட்ட அனைத்து மூா்த்திகளுக்கும் தினமும் ஹோமங்கள் நடத்தப்பட்டன. இந்த ஹோம மகோற்சவம் திங்கள்கிழமை, சண்டிகேஸ்வரா் ஹோமத்துடன் நிறைவு பெற்றது.

மேலும், காா்த்திகை இறுதி சோமவாரம் (திங்கள்கிழமை) என்பதால், சிவ சோமவார விரதம் கடைப்பிடிக்கப்பட்டது சிவலிங்கத்துக்கு பால், தயிா், தேன், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீா், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் குருக்கள் அபிஷேகத்தை நடத்தினாா். பின்னா் சிவாா்ச்சனையும், ருத்ராபிஷேகமும் நடைபெற்றன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com