தொடரும் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திரசிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.
தொடரும் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
தொடரும் விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
Published on
Updated on
1 min read

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திரசிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 21 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com