ராஜஸ்தானில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,076 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
ராஜஸ்தானில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு (கோப்புப்படம்)
ராஜஸ்தானில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு (கோப்புப்படம்)
Updated on
1 min read

ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,076 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்காக ராஜஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜஸ்தானில் புதிதாக 1,076 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,97,029-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 13,058 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,81,372-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,599-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com