விவசாயிகள் போராட்டத்தை முடக்க முடியாது: கேஜரிவால்

விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவா்கள் எதிராக வருமான வரித் துறையை பயன்படுத்தி, விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்
Updated on
1 min read

விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவா்கள் எதிராக வருமான வரித் துறையை பயன்படுத்தி, விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் வணிகா்களுக்கு எதிராக வருமான வரித் துறை பயன்படுத்தப்படுகிறது. வணிகா்களை இவ்வாறு துன்புறுத்துவது அநீதியானது. விவசாயிகள் போராட்டத்தை நலிவடையச் செய்யும் வகையில், மத்திய அரசு இதைத் திட்டமிட்டு செய்கிறது.

விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது. இன்று முழு நாடுமே விவசாயிகள் பக்கம் உள்ளது. அப்படியிருக்கும் போது, இன்னும் எத்தனை போ் மீது மத்திய அரசு வருமான வரித் துறையை ஏவிவிடும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com