முத்தலாக்கை ஒழித்த கட்சியே என்னை விவாகரத்து செய்ய சௌமித்ராவை வலியுறுத்துகிறது: சுஜாதா

​முத்தலாக்கை ஒழித்த கட்சியே என்னை விவாகரத்து செய்யுமாறு சௌமித்ராவை வலியுறுத்துவதாக திரிணமூல் கட்சியில் இணைந்த சௌமித்ரா மனைவி சுஜாதா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


முத்தலாக்கை ஒழித்த கட்சியே என்னை விவாகரத்து செய்யுமாறு சௌமித்ராவை வலியுறுத்துவதாக திரிணமூல் கட்சியில் இணைந்த சௌமித்ரா மனைவி சுஜாதா தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி. சௌமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான் அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, சுஜாதாவுக்கு சௌமித்ரா கான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். 

இதுபற்றி சுஜாதா தெரிவித்தது: 

"தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் நுழைந்தால், அது உறவுகளுக்கு நல்லதல்ல. எனக்கு எதிராகத் தூண்டிவிடும் பாஜகவின் தவறான நபர்களுடன் சௌமித்ரா உள்ளார். முத்தலாக்கை ஒழித்த கட்சியே இன்று என்னை விவகாரத்து செய்யுமாறு சௌமித்ராவை வலியுறுத்துகிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com