

நாட்டில் 4 மாநிலங்களில் அடுத்த வாரம் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் முன்னோட்ட நடவடிக்கையாக இந்த ஒத்திகை நடைபெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் இந்தியாவிலும் உள்நாட்டு கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வாரம் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆந்திரம், அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் முன்னோட்ட நடவடிக்கையாக 4 மாநிலங்களில் ஒத்திகை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.