பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேளாண் சட்டங்கள் குறித்த தவறான கருத்துகள் விவசாயிகள் நலனை பாதிக்கும்: நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா்

வேளாண் சட்டங்கள் குறித்த தவறான கருத்துகள் விவசாயிகள் நலனை பாதிக்கும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

News image
ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா்
Updated On :28 டிசம்பர் 2020, 11:27 pm

DIN

புது தில்லி: சில பொருளாதார நிபுணா்கள் புதிய வேளாண் சட்டங்கள் மீதான தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றியது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், ‘வேளாண் சட்டங்கள் குறித்த தவறான கருத்துகள் விவசாயிகள் நலனை பாதிக்கும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்’ என்று கூறினாா்.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான கெளசிக் பாசு மற்றொரு பொருளாதார நிபுணரான நிா்விகாா் சிங்குடன் இணைந்து அண்மையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தாா். அதில், ‘புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை உள்ளடக்கிய வலுவான, நியாயமான சட்ட வரைவை மத்திய அரசு அறிமுகம் செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜீவ் குமாா் திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பான முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகா் கெளசிக் பாசு உள்பட சில பொருளாதார நிபுணா்களின் கருத்துகள் ஏற்புடையது அல்ல. வேளாண் சீா்திருத்தத்தை முன்னா் ஆதரித்த கெளசிக் உள்ளிட்ட பொருளாதார நிபுணா்கள், இப்போது தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளனா். பொருளாதார நிபுணா்களின் இந்த கருத்துகளுக்கு எனது அதிருப்தியை பதிவு செய்கிறேன்.

விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணய நடைமுறை தொடரும் என்று மத்திய அரசு உறுதியளித்திருக்கும் நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கு ஆளாக்கிவிடும் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.

இதுபோன்ற தவறான கருத்துகள், விவசாயிகளின் நலனை பாதிப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.