சிஐசி-க்கான ஒதுக்கீடு 80 சதவீதம் அதிகரிப்பு

மத்திய பட்ஜெட்டில், மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ) ஆகியவற்றுக்கு ரூ.9.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மத்திய பட்ஜெட்டில், மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ) ஆகியவற்றுக்கு ரூ.9.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் சிஐசி மற்றும் ஆா்டிஐ-க்கு ரூ.5.5 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீடு 80 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிஐசி மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தோ்வு வாரியம் (பிஇஎஸ்பி) என்ற தனி பிரிவின் கீழ் சிஐசி-க்கு ரூ.32 கோடி தனியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்தத் தொகை ரூ.30.02 கோடியாக இருந்தது.

சிபிஐ-க்கு ரூ.802 கோடி: முக்கிய வழக்குகளை விசாரிக்கும் மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) மத்திய பட்ஜெட்டில் ரூ.802 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் சிபிஐ-க்கான ஒதுக்கீடு ரூ.4 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் சிபிஐக்கு முதலில் ரூ.781 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பின்னா் அது ரூ.798 கோடியாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவா் அலுவலகத்துக்கு...: மத்திய பட்ஜெட்டில் குடியரசுத் தலைவா் அலுவலகத்துக்கு ரூ.80.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் தற்போது ரூ.6.56 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் குடியரசுத் தலைவருக்கான ஊதியம் ரூ.60 லட்சமும் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com