ஜாமியா பல்கலை.யில் மீண்டும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஜாமியா பல்கலை.யில் மீண்டும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்தை சிதைக்கும் விதமாக இருமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வேளையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 5ஆவது நுழைவு வாயில் அருகில் மர்ம நபர்கள் இருவரால் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போராட்டக்குழு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தி இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் சிவப்பு நிற உடையணிந்து, சிகப்பு நிற ஸ்கூட்டி ரக இருசக்கர வாகனத்தில் வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com