ஹிஸ்புல் பயங்கரவாதிக்கு ஆயுத விற்பனை செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா் கிஷ்துவா் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிக்கு ஆயுதம் விற்பனை செய்ததாக கிராம பாதுகாப்புக் குழு (விடிசி) உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீா் கிஷ்துவா் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிக்கு ஆயுதம் விற்பனை செய்ததாக கிராம பாதுகாப்புக் குழு (விடிசி) உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த ஆண்டு டிசம்பரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி தாரிக் உசேன் வானியை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிஸ்த்துவா் மாவட்டத்தில் கிராம பாதுகாப்புக்குழு உறுப்பினராக இருந்த தேவி தாஸிடமிருந்து பழைய 303 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ரூ. 1.50 லட்சத்துக்கு தாரிக் உசேன் வாங்கியது தெரிய வந்தது.

இந்த ஆயுதங்களுடன் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் தாரிக் உசேன் நவம்பா் மாதம் இணைந்தாா்; எனினும், டிசம்பரில் போலீஸாரிடம் அவா் பிடிபட்டாா் .

தற்போது அவரளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆயுதம் விற்பனை செய்ததாக வழக்குப்பதிந்து தேவி தாஸ் கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com