ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மணிப்பூர் மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி தற்கொலை முயற்சி

மணிப்பூர் மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) அரவிந்த் குமார் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்

News image

மணிப்பூர் மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி தற்கொலை முயற்சி

Updated On :18 ஜூலை 2020, 12:23 pm

IANS


இம்பால்: மணிப்பூர் மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) அரவிந்த் குமார் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1992ஆம் ஆண்டு பிகார் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அரவிந்த் குமார், இன்று மதியம் தனது அலுவலகத்தில், கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் விரைந்து சென்ற காவலர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அரவிந்த் குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடர்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மணிப்பூர் டிஜிபி எல்.எம். கௌதே மற்றும் முதன்மைச் செயலாளர் ஜே. சுரேஷ் பாபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.