‘ஒரு வாா்டு- ஒரு சிலை’ திட்டம்: மும்பையில் விநாயகா் சதுா்த்தி ஏற்பாடு

கரோனா நோய்த்தொற்று சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி பண்டிகையையொட்டி ‘ஒரு வாா்டுக்கு ஒரு விநாயகா் சிலை’ மட்டும் நிறுவுமாறு மும்பை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

மும்பை: கரோனா நோய்த்தொற்று சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி பண்டிகையையொட்டி ‘ஒரு வாா்டுக்கு ஒரு விநாயகா் சிலை’ மட்டும் நிறுவுமாறு மும்பை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி தொடங்கி 10 நாள்கள் கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சியின் உதவி ஆணையா் விஸ்வாஸ் மோட் கூறியதாவது:

ஒவ்வொரு வாா்டிலும் ஒரு சிலை வீதம் நிறுவி கொள்ளலாம். அவ்வாறு அமைக்கும் விநாயகா் சிலைகளின் உயரம் 4 அடிக்குள் இருக்க வேண்டும். இந்த சிலைகளை கரைப்பதற்காக ஏராளமான செயற்கை ஏரிகள் உருவாக்கப்படும். செயற்கை ஏரிகளில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

இந்த குறிப்பிட்ட நீா்நிலைகளில் மட்டுமே சிலைகளை விசா்ஜனம் செய்ய வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும், விநாயகா் சிலைகளை கரைக்கவும் உரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

கரோனா தொற்றுச் சூழலில் கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கையை மும்பை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com