புது தில்லி: ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருள்களை அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுக்கும் திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
இன்று தில்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதற்கான ஒப்பந்தம் பெறப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் 6 - 7 மாதங்களில் இந்த திட்டம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கோதுமை, அரிசி, சர்க்கரை போன்றவை சுத்தமான முறையில் பொட்டலங்களாகக் கட்டப்பட்டு வீடுகளுக்கே கொண்டுச் சென்று வழங்கப்படும். அதே சமயம் ரேஷன் கடைக்குச் சென்று வாங்கிக் கொள்ளும் வசதியும் இணைந்தே இருக்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போரால், ஊட்டச்சத்து நிறைந்த மக்கானாவுக்கு வந்த நிலை?
மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை!

கேரள பேரவைத் தேர்தல்: வாக்களித்த எம்.பி.க்கள் சசி தரூர், ஜான் பிரிட்டாஸ்!

எரிவாயு தட்டுப்பாடு? கத்தார் செல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


