கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

தில்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி

ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்வதாக அறிவித்திருந்த பிரியங்கா காந்தி, தில்லியில் உள்ள லோதி எஸ்டேட்டில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

தில்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி

Updated On :30 ஜூலை 2020, 9:46 am

புது தில்லி: ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்வதாக அறிவித்திருந்த பிரியங்கா காந்தி, தில்லியில் உள்ள லோதி எஸ்டேட்டில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது தில்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி தங்கியிருக்கும் அரசு பங்களாவை ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு ஜூலை 1-ம் தேதி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆனால், பங்களாவை காலி செய்ய கூடுதல் நேரம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை மறுத்திருந்த பிரியங்கா, நான் அதுபோன்ற எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை. ஆகஸ்ட் 1ம் தேதி பங்களாவை காலி செய்கிறேன் என்று சுட்டுரை மூலம் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அவர் அரசு பங்களாவை காலி செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.