மகாராஷ்டிரத்தில் 3,890 பேருக்கு கரோனா: தாராவியில் மட்டும் 10
மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,890 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இன்று புதிதாக 10 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.








