ஆந்திரத்தில் ஆயில் டேங்கர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் தீப்பிடித்தன.
ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை எண்ணெய் டேங்கர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
அதிகாலை 12.06 மணிக்கு சுராரெட்டிபாலம் மற்றும் டங்குத்துரு ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.
தகவலறிந்த காவல்துறை, ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் அவ்வழியாக வந்த 4 ரயில்கள் வேறு வழியில் திருப்பி அனுப்பப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.