மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஒத்துழையுங்கள் இல்லையென்றால் பொது முடக்கம்தான்: பெங்களூருவாசிகளுக்கு எடியூரப்பா எச்சரிக்கை

பெங்களூருவில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருக்க  வேண்டுமென்றால், கரோனா பரவலைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழையுங்கள் என்று பெங்களூருவாசிகளுக்கு மாநில முதல்வர் எடியூரப்பா..

News image

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Updated On :25 ஜூன் 2020, 11:06 am

IANS

பெங்களூரு: பெங்களூருவில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருக்க  வேண்டுமென்றால், கரோனா பரவலைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழையுங்கள் என்று பெங்களூருவாசிகளுக்கு மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்திருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெங்களூருவில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டாம் என்றால், அரசு எடுக்கும் முயசிகளுக்கு ஒத்துழைப்பு தந்து சமூக இடைவெளியைப் பேணுவதே நல்லது.

கரோனா தொற்று அதிகமாகும் வேலையில், நாங்கள் தீவிர முயற்சி எடுத்து சில பகுதிகளை முடக்கியுள்ளோம். வியாழனன்று மதியம் கிருஷ்ணாவில் உள்ள எனது இல்ல அலுவகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆலோசிக்க உள்ளோம்.

அதேபோல் இந்த விவகாரத்தில் எடுக்க உள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு வேண்டி, நாளை அனைத்துக் கட்சிக் கூடம் ஒன்றும் நடைபெற உள்ளது.

நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பெங்களூரு சிறப்பாகவே உள்ளது; அத்துடன் மற்ற பகுதிகளுக்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்குகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.