மைசூரு மடாதிபதி வழிபாடு

கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அவதூத தத்த பீடத்தின் மடாதிபதி செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை வழிபட்டாா்.
ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய மைசூரு அவதூத தத்த பீடத்தின் மடாதிபதியுடன் தேவஸ்தான அதிகாரிகள்.
ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய மைசூரு அவதூத தத்த பீடத்தின் மடாதிபதியுடன் தேவஸ்தான அதிகாரிகள்.
Updated on
1 min read

திருப்பதி: கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அவதூத தத்த பீடத்தின் மடாதிபதி செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை வழிபட்டாா்.

திருப்பதி ஏழுமலையானை வழிபட கா்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள அவதூத தத்த பீடத்தின் மடாதிபதி கணபதி சச்சிதானந்த சுவாமிகள் செவ்வாய்க்கிழமை காலை தன் சீடா்களுடன் திருமலைக்கு வந்தாா். அவரை ஏழுமலையான் கோயில் வாசலில் தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் மரியாதை அளித்து, தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு, ஏழுமலையான் சேஷ வஸ்திரம், பிரசாதங்கள் உள்ளிட்டவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com