
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
இந்தியாவின் 46-வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் அக்டோபர் 3, 2018-இல் பதவியேற்றார். இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பளித்தார். இவருடைய தலைமையிலான அமர்வு, பாபர் மசூதி நில வழக்கில் விவாத்தத்துக்குரிய அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது முக்கியத்துவம் வாய்ந்தது.
இதையடுத்து, இவர் கடந்தாண்டு நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரஞ்சன் கோகோயை நியமன எம்பியாக அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.