எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

இந்தியாவிடம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவை கைவசம் போதிய அளவுக்கு இருப்பதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
Published on
Updated on
1 min read


இந்தியாவிடம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவை போதிய அளவுக்கு கைவசம் இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,

"இந்தியாவில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை. ஏப்ரல் மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திலும் அனைத்து எரிபொருளுக்கும் தேவை இருப்பதாக மதிப்பிட்டுள்ளோம். இந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்து மட்டத்திலும் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து சேமிப்பு கிடங்குகளைத் தவிர எரிவாயு, பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. எனவே, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com