ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பட்ஜெட் ஒதுக்கீடா, புதிய அறிவிப்பா என்பதை நிதியமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்: ப. சிதம்பரம்

​தேனீ வளர்ப்பு மற்றும் கால்நடை தடுப்பு மருந்து பற்றிய அறிவிப்பு, பட்ஜெட்டில் உள்ளடக்கியதா அல்லது புதிதாக நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதை நிதியமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார

News image

கோப்புப்படம்

Updated On :16 மே 2020, 4:58 pm IST


தேனீ வளர்ப்பு மற்றும் கால்நடை நோய்த்தடுப்பு மருந்துக்கு நிதி ஒதுக்கித் தற்போது வெளியிட்ட அறிவிப்பு, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிதானா, புதிதாக அனுமதிக்கப்படுகிறதா என்பதை நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெளிவுபடுத்த வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

"2020-21 பட்ஜெட்டில் தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்புக்கென ரூ. 2,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல, பட்ஜெட்டிலேயே தேசிய கால்நடை நோய் (கோமாரி ) தடுப்பு திட்டத்திற்காக  5 ஆண்டுகளுக்கு ரூ. 13,343 கோடி  அறிவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. 2020-21- நிதியாண்டில் இதற்கென ரூ. 1,300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை அறிவித்த நிதி ஒதுக்கீடு (தேனீ வளர்ப்புக்கு ரூ. 500 கோடி மற்றும் கால்நடை நோய்த் தடுப்புக்கு ரூ. 13,343 கோடி) பட்ஜெட் அறிவிப்புக்குள் உள்ளடக்கியதுதானா அல்லது கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்" என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான 'சுயசார்பு இந்தியா' என்ற திட்டம் பற்றி வெள்ளிக்கிழமை அறிவித்த நிர்மலா சீதாராமன், தேனீ வளர்ப்புக்காக ரூ. 500 கோடியும், கால்நடைகளுக்கான தடுப்பு மருந்துக்காக ரூ. 13,343 கோடியும் ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.