திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஒரு லட்சத்தை எட்டிய இந்தியா: மகாராஷ்டிரத்தில் மட்டும் 35,000 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது.

News image
Updated On :19 மே 2020, 5:41 am

DIN

புது தில்லி: மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,01,139-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பலி எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39174- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 35,000 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,249 பேர் பலியாகியுள்ளனர். இங்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஒரே நாளில் அதிகபட்சமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மும்பையில் மட்டும் 21,152 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 757 பேர் பலியாகியுள்ளனர். 

தமிழகம் 11,760 நோயாளிகளுடன், 81 பலி எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

குஜராத்தில் 11,746 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பலி எண்ணிக்கை 694 ஆக உள்ளது. 

தில்லியில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. பலி எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

சந்தைகள் திறக்கப்படலாம், ஆட்டோ, ரிக்சாக்களை கட்டுப்பாட்டுடன் இயக்கலாம், பல்வேறு மாநிலங்களில் பேருந்து சேவைகளும் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது. பலி எண்ணிக்கை 3000 ஐ கடந்தது.

ஒருபக்கம் தொழில்கள் தொடங்கப்பட்டாலும், மறுபக்கம்  பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், மதவழிபாட்டுத் தலங்களை திறக்க மே 31 வரை தடை நீடிக்கிறது.

மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 14ம் தேதி இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டு அது மே 3 வரை அறிவிக்கப்பட்டது. மீண்டும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தற்போது நான்காவது முறையாக மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுளள்து. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் தொடர்ந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.