புது தில்லி: இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தோல்வி அடைந்தது தெளிவாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காணொலி காட்சி வாயிலாக ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் கரோனா தீநுண்மி தொற்றுப் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது ஊரடங்கை தளர்த்தும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
நான்கு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பிரதமர் மோடி எதிர்பார்த்தப் பலன் கிட்டவில்லை. தற்போது மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவானது, இந்தியாவில் ஊரடங்கை தளர்த்துவது என்பதே, ஆனால் இது எந்த வகையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் உதவும் என்று தெரியவில்லை.
ஏழை மக்களின் தற்போதைய தேவை பணம்தான். அதனை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஏழை மக்களுக்கும், தொழிற்துறைக்கும் மத்திய அரசு நிதியுதவி செய்யாவிட்டால், அது மோசமான நிலையை உருவாக்கிவிடும்.
மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும், காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், மத்திய அரசின் உதவி கிடைக்காமல் செயல்படுவது என்பது மிகவும் கடினமானது என்று ராகுல் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


