மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சிலிகுரியில் கரோனா பாதித்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தைப் பிறந்தது

மேற்கு வங்கம், சிலிகுரியில் உள்ள வட வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா பாதித்த பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. 

News image
Updated On :27 மே 2020, 5:58 am

மேற்கு வங்கம், சிலிகுரியில் உள்ள வட வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா பாதித்த பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இதுகுறித்து மகப்பேறு மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் சந்தீப் சென்குப்தா கூறுகையில், 

கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. 

ஆரம்பத்தில் கரோனா தொற்று நோயைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களிடம் ஒரு பயம் இருந்தது. தற்போது அதை எதிர்த்துப் போராடும் துணிவு வந்துவிட்டது. மருத்துவ குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

தாய் மற்றும் குழந்தை இருவரும் தற்போது நலமாக இருக்கிறார்கள். தேவைப்பட்டால், தொற்று பாதித்த பெண்ணை கரோனா மருத்துவமனைக்கு மாற்றுவோம் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.