பிகாரில் நாளை(நவ.3) 2ம் கட்டத் தேர்தல் : தயார் நிலையில் தேர்தல் ஆணையம்

பிகாரில் நாளை(நவம்பர் 3) இரண்டாம் கட்டத் தேர்தல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்னணு இயந்திரங்களை கொண்டு செல்லும் துணை ராணுவப் படை வீரர்கள்
மின்னணு இயந்திரங்களை கொண்டு செல்லும் துணை ராணுவப் படை வீரர்கள்
Updated on
1 min read

பிகாரில் நாளை(நவம்பர் 3) இரண்டாம் கட்டத் தேர்தல் நடத்த தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்று வருகின்றது. முதற்கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 71 சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை (நவம்பர் 3) 94 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ளது.

17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்துவதற்காக ஈ.வி.எம், வி.வி.பி.ஏ.டி மற்றும் பிற இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நவம்பர் 3ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் தேர்தல் மாலை 4 மணியளவில் முடிவடையும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு இயந்திரங்கள் உள்பட அனைத்து உபகரணங்களும் துணை ராணுவப் படையின் கண்காணிப்பில் வைக்கப்படும்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த மாவட்டத் தலைமையகத்திற்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு, நவம்பர் 10ஆம் தேதி மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மூன்றாம் கட்டத்தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 53.54 சதவிகித வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com