அர்னாப் கோஸ்வாமி தலோஜா சிறைக்கு மாற்றம்

​கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்குத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்குத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதுபற்றி காவலர் ஒருவர் தெரிவித்ததாவது:

"ராய்கட் மாவட்டத்திலுள்ள அலிபக் சிறைக்கான கரோனா மையமாக உள்ளூர் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்குத் தொடர்பாக நீதிமன்றக் காவலில் உள்ள அர்னாப் கோஸ்வாமி செல்போன் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.

நவம்பர் 4-ம் தேதி காவலில் எடுத்தவுடன் அர்னாப் கோஸ்வாமி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் அவர் சமூக ஊடகங்களில் செயல்பட்டு வருவதை ராய்கட் குற்றப்பிரிவு காவல் துறையினர் கண்டறிந்தனர்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com