புதிதாக பெயர் மாற்றப்பட்ட மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் புதிய பெயர்ப் பலகையை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் என்று பிரதமர் நரேந்திரமோடி மாற்றினார். கடந்த 8-ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ரோ-பாக்ஸ் படகு சேவையின் தொடக்க விழாவின் போது இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமரின் அறிவிப்பை அடுத்து சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் இந்த அறிவிக்கை கடந்த 10-ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து துறையின் அனைத்து அலுவலகங்களிலும் பெயர் மாற்றம் அமலுக்கு வந்தது. இரண்டு வேலை நாள்களில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டன.
இந்த நிலையில் புதிதாக எழுதப்பட்ட அமைச்சகத்தின், உலோகத்தால் ஆன பெயர் பலகையை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று திறந்து வைத்தார்.