கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பிகார் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி: மகா கூட்டணி புறக்கணிப்பு

பிகார் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க மகா கூட்டணி முடிவு செய்துள்ளது.

News image

பிகார் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி: மகா கூட்டணி புறக்கணிப்பு

Updated On :16 நவம்பர் 2020, 9:33 am

IANS


பாட்னா: பிகார் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க மகா கூட்டணி முடிவு செய்துள்ளது.

நடந்த முடிந்த தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான முடிவையே அளித்தது, ஆனால், அது மோசடியால்  மாற்றப்பட்டுவிட்டது என்று மகா கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் உள்பட ஐந்து கட்சிகள் இணைந்து அமைக்கப்பட்ட மகா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளுமே, பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை ஒருமனதாக எடுத்துள்ளன.

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிதீஷ் குமாா், அந்த மாநிலத்தின் முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளாா். அவருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

பிகார் முதல்வராக நிதீஷ் குமாருக்கும், அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 13 பேருக்கும் ஆளுநர் பாகு சௌஹான் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

நிதீஷ் குமாருடன், தார்கிஷோர் பிரசாத் (துணை முதல்வர்), அஷோக் சௌதரி, விஜய் சௌதரி, மேவா லால் சௌதரி, பிஜேந்திர யாதவ், ரேணு தேவி, மங்கல் பாண்டே, பிரேம் குமார், சம்ராட் சௌதரி, நிதிஷ் மிஷ்ரா, நந்த்கிஷோர் யாதவ், முகேஷ் சஹானி, ஜிதன் ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் ஷரண் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.

ஆளுநா் மாளிகையில் இன்று மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் பங்கேற்க விருப்பதாக ஏஎன்ஐ செய்திகள் உறுதி செய்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.