பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய விமானப்படையால் அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 400 கி.மீ. இலக்கை துல்லியமாகத் தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்திய விமானப்படையால் அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து 300 கி.மீ. இலக்கை துல்லியமாகத் தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இருந்து திட்டமிடப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதிக்கப்பட்டது. இந்திய விமானப் படையால் கடந்த 2 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட 2 ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

பிரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட சூப்பர் சானிக் ஏவுகணை 300 கி.மீ. பயணித்து தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. இது ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இதே வகையிலான ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com