

மும்பை-புணே அதிவேக நெடுஞ்சாலையில் பன்வேல் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் காயமடைந்தனர்.
சதாராவிலிருந்து மும்பைக்குச் செல்லும் வழியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து நிலைதடுமாறியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் காமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.