அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

அபராதத்தை ரொக்கமாக வசூலிப்பதை தவிர்க்கலாம்: தில்லி உயர் நீதிமன்றம்

கரோனா விதிமுறைகளை மீறும் பொதுமக்களிடமிருந்து அபராதத் தொகையை ரொக்கமாக வசூலிப்பதை தவிர்க்கலாம் என்று தில்லி அரசுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image

தில்லி உயர் நீதிமன்றம்

Updated On :26 நவம்பர் 2020, 9:36 am

PTI


புது தில்லி: கரோனா விதிமுறைகளை மீறும் பொதுமக்களிடமிருந்து அபராதத் தொகையை ரொக்கமாக வசூலிப்பதை தவிர்க்கலாம் என்று தில்லி அரசுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வெறும் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று விதிமுறை வகுத்திருக்கும் தில்லி அரசு, அதனை நடைமுறைப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்றும், தற்போது தில்லி முழுவதும் ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில், ரொக்கப் பரிமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதுபோன்ற அபராதங்களை வசூலிக்க இதுவரை இணையதளம் இல்லையென்றாலும், இனி உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

விசாரணையின் போது, நாளொன்றுக்கு 40 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தில்லி அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அது குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், ஏராளமான உயிர்களை இழந்த பிறகு, இந்த நடவடிக்கையை எடுக்க நீதிமன்றம் தரப்பில் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.