அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. விகாஸ் பட்டாச்சார்யாவுக்கு கரோனா

கொல்கத்தா மாநிலங்களவை உறுப்பினர் விகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளார்.

News image
Updated On :27 நவம்பர் 2020, 7:35 am

PTI

கொல்கத்தா மாநிலங்களவை உறுப்பினர் விகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

கொல்கத்தாவின் முன்னாள் மேயரான பட்டாச்சார்யா(69), இவர் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

தற்போது அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர், மேற்கு வங்க சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன் கரோனா பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.