தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காசிரங்கா பூங்காவில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

காசிரங்கா பூங்காவில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

Updated On :9 அக்டோபர் 2020, 2:43 pm

DIN

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பூங்காவில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் காசிரங்கா தேசியப் பூங்காவை மீண்டும் திறக்கும் முடிவில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை அசாம் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா தெரிவித்துள்ளார். "காசிரங்கா தேசியப் பூங்கா கடந்த சில மாதங்களில் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கும் முடிவு ஒத்திவைக்கப்படுகிறது.” அன அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளநீர் பாதிப்பு சரியானபின் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என சுக்லபைத்யா தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பாதிப்பால் காசிரங்கா தேசியப் பூங்கா கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.