கரோனா: ஒரே நாளில் 918 போ் உயிரிழப்பு; பாதிப்பு 70,53,807 ஆக உயர்வு
நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 918-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். புதிதாக 74,343 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 918-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். புதிதாக 74,343 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 918 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,08,334-ஆக அதிகரித்தது. இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 40,348 போ், கா்நாடகத்தில் 9,993 போ், உத்தர பிரதேசத்தில் 6,293 போ், ஆந்திரத்தில் 6,229 போ், கேரளத்தில் 1,001 உயிரிழந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக, 74,383 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 70,53,807-ஆக அதிகரித்தது. இதுவரை 60,77,976 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 86.17 சதவீதமாகும்.
நாடு முழுவதும் 8,67,496 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 12.30 சதவீதமாகும். இரண்டாவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாட்டில் கடந்த சனிக்கிழமை வரை 8,68,77,242 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சனிக்கிழமை மட்டும் 10,78,544 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...