பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஹாத்ரஸ்: மதச்சார்பற்ற இயக்கம் சார்பில் மும்பையில் போராட்டம்

ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி மதச்சார்பற்ற இயக்கம் சார்பில் மும்பையில் போராட்டம் நடைபெற்றது.

News image
ஹாத்ரஸ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி ஓவியங்கள் வரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
Updated On :16 அக்டோபர் 2020, 5:31 am

DIN

ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி மதச்சார்பற்ற இயக்கம் சார்பில் மும்பையில் போராட்டம் நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மும்பையில் மதச்சார்பற்ற இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும், ஹாத்ரஸில் பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை புறநகர் பகுதியான காட்கோபர் பகுதியில் போராட்டக்காரர்கள் ஹாத்ரஸ் விவகாரத்தை எதிரொலிக்கும் வகையில் ஓவியங்களை வரைந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் ஹாத்ரஸ்  விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.