நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மத்திய உள்துறைச் செயலரின் பதவிக் காலம் நீட்டிப்பு

மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லாவின் பதவிக் காலத்தை மத்திய அரசு ஆகஸ்ட் 22, 2021 வரை நீட்டித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 அக்டோபர் 2020, 3:03 pm

DIN


மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லாவின் பதவிக் காலத்தை மத்திய அரசு ஆகஸ்ட் 22, 2021 வரை நீட்டித்துள்ளது.

நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற வேண்டிய நிலையில், அவருடைய பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அஜய் பல்லா கடந்தாண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி உள்துறைச் செயலர் பொறுப்பை ஏற்றார். மறு உத்தரவு வரும் வரை அல்லது ஆகஸ்ட் 22,2021 வரை பல்லாவின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய உள்துறைச் செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு அதிகாரியாக இருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.