பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

'மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்பிற்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்'

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

News image
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பவார்
Updated On :18 அக்டோபர் 2020, 12:59 pm

DIN

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பில் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் நிரம்பிய அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளதால், பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு மகாராஷ்டிரத்தின் புணே, சோலாப்பூர், சாங்லி மற்றும் சதாரா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர், நிதி நிவாரணம் தொடர்பான பிரச்சினையை முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன் கலந்துரையாடுவதாகவும், இதற்கு மத்திய அரசு உதவி புரிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ''தொடர் கனமழையால் ஓரிரு ஆண்டுகளாக மீண்டும் பயிர்களை விதைக்க முடியாத வகையில் நிலம் அழிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் விவசாய பொருளாதாரம் முற்றிலும் அழிந்துள்ளது இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தொகையை விடுவிக்க வேண்டும்'' என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.