நாட்டில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா; 488 பேர் பலி

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நரத்தில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 488 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா; 488 பேர் பலி
நாட்டில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா; 488 பேர் பலி


புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நரத்தில் புதிதாக 36,469 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 488 பேர் பலியாகியுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,46,429 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1,19,502 ஆக உள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 6,25,857 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்து சிகிச்சையின் பயனாக 63,842 பேர் குணமடைந்துள்ளனர். எனவே, நாடு முழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 72,01,070 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com