மும்பை: அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில் மூதாட்டி பலி
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடு குடியிருப்பின் 3 மற்றும் 7வது மாடி இடிந்து விழுந்ததில் 65 வயது முதியவர் உயிரிழந்தார். 5 படுகாயம் அடைந்துள்ளனர்.


மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடு குடியிருப்பின் 3 மற்றும் 7வது மாடி இடிந்து விழுந்ததில் 65 வயது முதியவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரத்தில் மும்பை நகரின் டோங்ரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3 மற்றும் 7வது மாடி திடீரென இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்று உயிரிழந்ததாக பிரஹன்மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...