விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

​ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :2 செப்டம்பர் 2020, 11:06 am

DIN


ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் உருது, காஷ்மீரி, டோக்ரி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகள் அலுவல் மொழிகளாகவுள்ளன.

பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இது செய்யப்பட்டுள்ளதாக பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.