கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சந்திரபாபு நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, வாகன விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

News image
ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர்சந்திரபாபு நாயுடு
Updated On :27 ஜனவரி 2024, 5:16 pm

DIN



ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர்சந்திரபாபு நாயுடு, வாகன விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு படையினரின் கார்கள் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தன. 

அப்போது திடீரென சாலையின் குறுக்கே பசு ஒன்று வந்துள்ளது. இதன் மீது மோதமால் இருப்பதற்காக பாதுகாப்பு படையினர் தங்களது காரில் திடீரென பிரேக் போட்டுள்ளனர். 

முன்னாள் சென்று பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதின. இதில் சந்திரபாபு நாயுடு வந்த கார் உள்பட 8 கார்களும் பலத்த சேதமடைந்தன. 

இந்த விபத்தில் சந்திரபாபு நாயுடு காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.