தாவூத் இப்ராஹிம் சாா்பில் உத்தவ் தாக்ரேவுக்கு தொலைபேசி அழைப்பு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பேச விரும்புவதாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்ரேவுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததால் அவரது வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தாவூத் இப்ராஹிம் சாா்பில் உத்தவ் தாக்ரேவுக்கு தொலைபேசி அழைப்பு
Updated on
1 min read

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பேச விரும்புவதாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்ரேவுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததால் அவரது வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், ‘சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் முதல்வா் வீட்டிற்கு இரண்டு முறை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தான் துபையில் இருந்து பேசுவதாகவும், தாவூத் இப்ராஹிம் உங்களுடன் பேச விரும்புவதாகவும் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

இதனிடையே, ‘முதல்வா் வீட்டை தகா்த்துவிடுவதாக தொலைபேசியில் பேசிய நபா் கூறியதாக வெளியாகும் செய்திகள் தவறானது’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் அனில் பரப் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com