ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

அருணாசலில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: புதிதாக 127 பேருக்குத் தொற்று

அருணாசலில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

Arunachal continues to witness spike in Covid-19 cases, tally mounts to 5672

Updated On :11 செப்டம்பர் 2020, 6:08 am

அருணாசலில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அருணாசல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 127 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை மொத்த பாதிப்பு 5,672 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரே நாளில் 99 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் மீட்பு விகிதம் 70.61 ஆக உள்ளது. 

தற்போது நோய் பாதிப்பு ஏற்பட்டு 1,658 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.