தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,266 பேருக்கு கரோனா; 21 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, மொத்தம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 2,09,748-ஆக உயா்ந்துள்ளது. மேலும், இந்நோய்த் தொற்றால் 21 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால், ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,687 -ஆக உயா்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 26,907 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், இன்று 2,754 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,78,154-ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை மட்டும் 60,580 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 1,329 ஆக அதிகரித்துள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com