நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கரோனா பரிசோதனை செய்து கொண்டார் வெங்கையா நாயுடு
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக, கரோனா பரிசோதனையை செய்து கொண்டார் குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு.


புது தில்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக, கரோனா பரிசோதனையை செய்து கொண்டார் குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் கோவிட் பரிசோதனையை செய்து கொள்வது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவையில் கலந்து கொள்வதற்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்னும் பரிசோதனை அறிக்கை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனையை செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14, திங்கட்கிழமை அன்று தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடருக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை வெங்கையா நாயுடு இரு தினங்களுக்கு முன் ஆய்வு செய்தார்.
சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டுள்ள இருக்கை ஏற்பாடுகளோடு, செயலகத்தின் பணியாளர்களைக் கொண்டு வெங்கையா நாயுடு தலைமையில் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...